- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -
கூடுதல் பேருந்து தொடர்பாக
மனு எண்: தொடுவானம்/6716/24/08/2011அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
விளாச்சேரி கிராமம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
விளாச்சேரி ஊராட்சியிக்கு மதுரை பரியார் பேருந்து நிலையத்திலிருந்து காலை 11.45 மணி முதல் 2 மணி வரை பேருந்து ஏதும் இல்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் வரும் மக்கள் பேருந்து இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த இடைப்பட்ட நேரத்தில் கூடுதலாக இரண்டு பேருந்துகள் வரச்செய்து பொதுமக்களுக்கு உதவி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
This post was submitted by test.
Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil
URL to article: http://thoduvanam.com/tamil/6716/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/
Click here to print.
பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.
Comments Disabled To "கூடுதல் பேருந்து தொடர்பாக"
#1 Comment By madurai On August 24, 2011 @ 4:41 am
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர், மதுரை வடக்கு/போக்குவரத்து அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர், மதுரை வடக்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.
– மதுரை மாவட்ட ஆட்சியர்
#2 Comment By tnstccomml On January 20, 2012 @ 11:20 am
இக்கோரிக்கை தொடர்பாக அரசால் அறிவிக்கப்படும் புதிய பேருந்து சோ்க்கையின் போது தான் நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.